tamilnadu

img

மோடிக்கு எதிராக பெண் வேட்பாளர்

வாரணாசி:

பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி தொகுதியில், இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். அங்கு ஏப்ரல் 26-ஆம் தேதி அவர், வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.இந்நிலையில், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா கூட்டணி சார்பில், ஷாலினி யாதவ் என்ற பெண் வேட்பாளரை, சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.இவர் நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் துணை சபாநாயகரான ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசைச் சேர்ந்த இவர், அண்மையில்தான் அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


;